» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வ.உ.சி. துறைமுகத்தில் காற்றாலை, சோலார் மூலம் 32½ லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி!
சனி 5, ஜூலை 2025 8:47:32 AM (IST)
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சூரிய மின்நிலையம், காற்றாலை மூலம் 32½ லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சுத்தமான மற்றும் பசுமை துறைமுகமாக மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதன்படி வ.உ.சி. துறைமுகத்தில் 5 மெகாவாட் தரையில் பொருத்தப்பட்ட சூரிய மின்நிலையம், 2 மெகாவாட் காற்றாலை மின்நிலையம், 1.04 மெகாவாட் மேற்கூரை சூரிய மின்நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் துறைமுகத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் வ.உ.சி துறைமுகம் 35 லட்சத்து 62 ஆயிரத்து 839 யூனிட் மின்சாரத்தை சூரிய மின் ஆலை மற்றும் காற்றாலை மூலம் உற்பத்தி செய்து உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 27 லட்சத்து 36 ஆயிரத்து 229 யூனிட்டுன் ஒப்பிடும் போது, 30 சதவீதம் அதிகம் ஆகும். இது வ.உ.சி. துறைமுகத்தின் நிலைத்தன்மை மற்றும் சுத்தமான எரிசக்தி ஆதாரங்களை ஏற்றுக்கொள்வதற்கான உறுபாட்டை பிரதிபலிக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி : ஆணையர் ப்ரியங்கா துவக்கி வைத்தார்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:36:16 PM (IST)

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.22,970 பறிமுதல்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:14:15 PM (IST)

சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக ஷேக் அப்துல் காதர் பொறுப்பேற்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:24:53 PM (IST)

மாயமான கல்லூரி மாணவியை மீட்கக் கோரி டிஎஸ்பி அலுவலகம் முன்பு உறவினர்கள் தர்ணா!
வெள்ளி 17, ஜூலை 2026 8:21:32 PM (IST)

தூத்துக்குடியில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது!
வெள்ளி 17, ஜூலை 2026 8:04:33 PM (IST)

சிசு மரணங்களைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
வெள்ளி 17, ஜூலை 2026 5:42:07 PM (IST)









முட்டாள்Jul 5, 2025 - 12:43:48 PM | Posted IP 162.1*****