» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வியாழன் 19, ஜூன் 2025 3:15:58 PM (IST)



தூத்துக்குடியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கிராமிய கலைகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திபு ஆலோசனையின் பேரில், குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு சார்பில் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள், குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம், புதுக்கோட்டை பகுதிகளில் தமிழன்டா கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் தலைமையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் தாரை தப்பட்டைகள் முழங்க கிராமிய நடனம், விழிப்புணர்வு பாடல், நாடகம் போன்றவை மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. தூத்துக்குடி அனைத்தும் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுசியா, தலைமை காவலர்கள் பொன்னரசி, ராஜ ராஜேஸ்வரி, காவலர்கள் சண்முக பிரியா, மணி செல்வியா, புதுக்கோட்டை பகுதிகளில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பாமா பத்மினி, உதவி ஆய்வாளர் லதா ஆகியோர் ஏற்பாட்டில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


New Shape Tailors




CSC Computer Education



Thoothukudi Business Directory