» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரும் தொடர் போராட்டத்தின் 400ஆவது நாள் நிகழ்ச்சி!

வியாழன் 19, ஜூன் 2025 12:47:28 PM (IST)



பொட்டலூரணியில் கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரும் தொடர் போராட்டத்தின் 400 ஆவது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் கழிவுமீன் நிறுவனங்களை மூடக் கோரி கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில, தொடர் போராட்டம் தொடங்கிய 400 ஆவது நாள் நிகழ்ச்சி பொட்டலூரணியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குப் போராட்டக்குழு பொறுப்பாளர் சண்முகம்  தலைமை தாங்கினார். 

பொறுப்பாளர் இராதாகிருஷ்ணன் வரவேற்றார். தமிழ்த் தேசியப் பேரவை பொறுப்பாளர்  மணிமாறன் முன்னிலை வகித்தார். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தைச் சேர்ந்த தென்மாறன், சமூக ஆர்வளர் மோகன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். புதுக்கோட்டை பாவாணன் சிறப்புரை ஆற்றினார். திருவைகுண் செயபால், இளங்கோ பாண்டியன், லெனின், தங்கராச் உள்ளிட்ட தமிழ் ஆர்வளர்களும் திரளான ஊர்ப் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் பேசிய நிர்வாகிகள், "கழிவு மீன்நிறுனங்கள் மூடப்படவேண்டும்; பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போராட்டக்குழுவின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம் என்று தெரிவித்தனர். நிறைவாக பொறுப்பாளர் பால்ராச் நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

New Shape Tailors



CSC Computer Education



Thoothukudi Business Directory