» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காட்டுப்பகுதியில் எலும்புக்கூடாக பெண் சடலம் மீட்பு : போலீசார் விசாரணை
செவ்வாய் 17, ஜூன் 2025 8:27:19 PM (IST)
தட்டார்மடம் அருகே காட்டுப்பகுதியில் எலும்புக்கூடாக கிடந்த பெண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து சித்தன் குடியிருப்பு காட்டு பகுதியில் ஒரு பெண் சடலம் கிடப்பதாக தட்டார்மடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் அனிதா தலைமையிலான போலீசார் சென்று பார்த்த போது, காட்டுப்பகுதியில் எலும்பு கூடான நிலையில் சடலம் காணப்பட்டது.
அதனருகே ஒரு கம்பும் தண்ணீர் பாட்டிலும் நீலநிற புடவை மற்றும் துணிகள் கிடந்துள்ளது. 60 வயது மதிக்க பெண் சடலம் எனவும், அவர் யாரென தெரியவில்லை. காட்டுப்பகுதிக்கு வந்து மீண்டும் வெளிய வர முடியாமல் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து சடலத்தை கைப்பற்றி, சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு உடல்குறி பகுப்பாய்விற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து படுக்கப்பத்து கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் அனிதா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










