» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காட்டுப்பகுதியில் எலும்புக்கூடாக பெண் சடலம் மீட்பு : போலீசார் விசாரணை

செவ்வாய் 17, ஜூன் 2025 8:27:19 PM (IST)

தட்டார்மடம் அருகே காட்டுப்பகுதியில் எலும்புக்கூடாக கிடந்த பெண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து சித்தன் குடியிருப்பு காட்டு பகுதியில் ஒரு பெண் சடலம் கிடப்பதாக தட்டார்மடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் அனிதா தலைமையிலான போலீசார் சென்று பார்த்த போது, காட்டுப்பகுதியில் எலும்பு கூடான நிலையில் சடலம் காணப்பட்டது. 

அதனருகே ஒரு கம்பும் தண்ணீர் பாட்டிலும் நீலநிற புடவை மற்றும் துணிகள் கிடந்துள்ளது. 60 வயது மதிக்க பெண் சடலம் எனவும், அவர் யாரென தெரியவில்லை. காட்டுப்பகுதிக்கு வந்து மீண்டும் வெளிய வர முடியாமல் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து சடலத்தை கைப்பற்றி, சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு உடல்குறி பகுப்பாய்விற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து படுக்கப்பத்து கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் அனிதா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory