» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை : போலீசார் விசாரணை

செவ்வாய் 17, ஜூன் 2025 11:01:36 AM (IST)

தூத்துக்குடியில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தூத்துக்குடி அண்ணா நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி பத்மா (35). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பத் தகராறு காரணமாக பத்மா கணவரை விட்டு பிரிந்து தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு படுக்கை அறையில் மின்விசிறியில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சம்பவம் குறித்து தகவலின் பேரில், தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் சம்பவ இடத்திற்கு சென்று பத்மாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் பத்மா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணைை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory