» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் : மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை!

திங்கள் 16, ஜூன் 2025 11:43:51 AM (IST)



கொல்லம் பரும்பு கிராமத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம்  மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். 

கொல்லம் பரும்பு கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோார்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், குளத்தூர் விளாத்திகுளத்துக்கும் இடையே கொல்லம்பரம்பு கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம் இங்கு இருந்து தூத்துக்குடிக்கு தினசரி காலை 8 மணிக்கு நண்பகல் ஒரு மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஆகிய நேரங்களில் மூன்று தடவை அரசு டவுன் பஸ் வந்து சென்று கொண்டிருந்தது. 

குறுக்கு சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் இந்த பேருந்தை பயன்படுத்தி வந்தனர். மேலும் வேலைக்கு செல்பவர்களும் இந்த பேருந்தை நபியை சென்று வந்தனர். ஆனால் கடந்த ஜூன் 5-ம் தேதி முதல் இந்த பேருந்து சரியான நேரத்திற்கு எங்களது கிராமத்திற்கு வருவதில்லை. 

இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்லும் பெரியவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறோம். மேலும் எங்களது ஊரிலிருந்து குறுக்கு சாலை செல்வதற்கு ஆட்டோவில் சென்றால் 200 ரூபாய் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் பள்ளி மாணவ மாணவிகளின் படிப்பு வீணாக போகிறது. ஆகவே நிறுத்தப்பட்ட பேருந்தை சரியான நேரத்திற்கு எங்களது கிராமத்திற்கு வந்து செல்லும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory