» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா!
திங்கள் 16, ஜூன் 2025 11:21:19 AM (IST)

பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது இதையொட்டி ஆலயத்தில் ஞாயிறு சிறப்பு ஆராதனையும், பரிசுத்த நற்கருணை ஆராதனையும் நடந்தது. சேகரகுரு. டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து சுற்றுச்சூழல் தினத்தை மேன்மைப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறப்பு செய்தி கொடுத்து ஆராதனையை நடத்தினார்.
இந்த ஆராதனையில் சபை மக்கள் திரளானோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து ஆலய வளாகத்தில் மரக்கன்று வழங்கல் நிகழ்ச்சி நடந்தது. சேகரகுரு. டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 175 க்கு மேற்பட்ட மக்களுக்கு சந்தன மரக்கன்று வழங்கப்பட்டன. இதில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஷம்மா அகஸ்டின், திலகர், சபை மூப்பர்கள் கோயில்ராஜ், சாமுவேல், சபை ஊழியர்கள் டேனியல் ஆசீர்வாதம், டென்சிங் மற்றும் சபை மக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










