» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா!

திங்கள் 16, ஜூன் 2025 11:21:19 AM (IST)



பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. 

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது இதையொட்டி ஆலயத்தில் ஞாயிறு சிறப்பு ஆராதனையும், பரிசுத்த நற்கருணை ஆராதனையும் நடந்தது. சேகரகுரு. டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து சுற்றுச்சூழல் தினத்தை மேன்மைப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறப்பு செய்தி கொடுத்து ஆராதனையை நடத்தினார். 

இந்த ஆராதனையில் சபை மக்கள் திரளானோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து ஆலய வளாகத்தில் மரக்கன்று வழங்கல் நிகழ்ச்சி நடந்தது. சேகரகுரு. டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 175 க்கு மேற்பட்ட மக்களுக்கு சந்தன மரக்கன்று வழங்கப்பட்டன. இதில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஷம்மா அகஸ்டின், திலகர், சபை மூப்பர்கள் கோயில்ராஜ், சாமுவேல், சபை ஊழியர்கள் டேனியல் ஆசீர்வாதம், டென்சிங் மற்றும் சபை மக்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory