» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்!

திங்கள் 16, ஜூன் 2025 10:42:58 AM (IST)

தூத்துக்குடியில் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் இன்று 225 விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 

தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 270 விசைப் படகுகளில் தினமும் கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனிடையே மீன்களின் இனப்பெருக்கத்தைக் கருத்தில்கொண்டு, வங்கக் கடலில் ஏப். 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. 

அதன்படி, நிகழாண்டு தடைக்காலம் தொடங்கி, ஜூன் 14ம் தேதி (சனிக்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடைந்தது. ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து காலை 5 மணியளவில் 225 விசை படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory