» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துணை மின் நிலையத்தில் ரூ.1லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்கள் திருட்டு : போலீஸ் விசாரணை

திங்கள் 16, ஜூன் 2025 10:34:37 AM (IST)

தூத்துக்குடியில் துணை மின் நிலையத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி சிப்காட்  வளாகத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் கடந்த 13ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து உள்ள சென்ற மர்ம நபர்கள் அங்கு இருந்த காப்பர் வயர்களை திருடி சென்று விட்டார்களாம். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். 

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மண்டல அலுவலர் ஞானகுரு என்பவர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் வழக்கு பதிவு செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் சைரஸ் விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory