» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குமிழ் முனை பதிப்பகத்தின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா

திங்கள் 16, ஜூன் 2025 10:14:07 AM (IST)



தூத்துக்குடியில் குமிழ் முனை பதிப்பகத்தின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. 
 
தூத்துக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மாடியில் குமிழ் முனை பதிப்பகத்தின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆயிரம் பொன் அரவிந்த் எழுதிய பிழைத்தது பட்டாம்பூச்சி என்ற கவிதை நூலை ஓய்வுபெற்ற தூத்துக்குடி ஆல் இந்தியா ரேடியோ இயக்குனர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். வள்ளிநாயகி ஏற்புரை வழங்கினார். 

தொடர்ந்து புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றத்தின் சார்பில் இலக்கிய பந்தி நிகழ்வு நடைபெற்றது. அகநானூறு காதலி இயற்கை என்ற தலைப்பில் எழுத்தாளர் மாரிமுத்து, பெண்கள் என்ற தலைப்பில் செல்வி ஐஸ்வர்யா,பிரிவு என்ற தலைப்பில் குமிழ் முனை புத்தக வண்டி நிறுவனர் சைமன் உரையாற்றினர். 

இலக்கிய ஆர்வலர் பத்மநாதன் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலையின் குரல் நிறுவனர் கலை வளர்மணி சக்திவேல் குமிழ்முனை பதிப்பக உரிமையாளர் சைமன், நிறுவனர் சக்திவேல் மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர்  செய்திருந்தனர். இந்நிகழ்வில் மணிவண்ணன், செல்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory