» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குமிழ் முனை பதிப்பகத்தின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா
திங்கள் 16, ஜூன் 2025 10:14:07 AM (IST)

தூத்துக்குடியில் குமிழ் முனை பதிப்பகத்தின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மாடியில் குமிழ் முனை பதிப்பகத்தின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆயிரம் பொன் அரவிந்த் எழுதிய பிழைத்தது பட்டாம்பூச்சி என்ற கவிதை நூலை ஓய்வுபெற்ற தூத்துக்குடி ஆல் இந்தியா ரேடியோ இயக்குனர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். வள்ளிநாயகி ஏற்புரை வழங்கினார்.
தொடர்ந்து புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றத்தின் சார்பில் இலக்கிய பந்தி நிகழ்வு நடைபெற்றது. அகநானூறு காதலி இயற்கை என்ற தலைப்பில் எழுத்தாளர் மாரிமுத்து, பெண்கள் என்ற தலைப்பில் செல்வி ஐஸ்வர்யா,பிரிவு என்ற தலைப்பில் குமிழ் முனை புத்தக வண்டி நிறுவனர் சைமன் உரையாற்றினர்.
இலக்கிய ஆர்வலர் பத்மநாதன் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலையின் குரல் நிறுவனர் கலை வளர்மணி சக்திவேல் குமிழ்முனை பதிப்பக உரிமையாளர் சைமன், நிறுவனர் சக்திவேல் மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் மணிவண்ணன், செல்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










