» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எம்பவர் இந்தியா சார்பில் முதியோர்கள் மீதான வன்கொடுமை எதிர்ப்புக்கான சர்வதேச தினம்
திங்கள் 16, ஜூன் 2025 10:09:36 AM (IST)
எம்பவர் இந்தியா சார்பில் முதியோர்கள் மீதான வன்கொடுமை எதிர்ப்புக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்பட்டது
தூத்துக்குடியில் எம்பவர் இந்தியா சமூக சேவை அமைப்பு சார்பில் பீச் ரோட்டில் அமைந்துள்ள எம்பவர் மக்கள் மருந்தகத்தில் முதியோர்கள் மீதான வன்கொடுமை எதிர்ப்புக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசிய எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நடுவத்தின் கௌரவச் செயலாளர் ஆ.சங்கர் கூறியதாவது :
இந்தியாவைப் பொறுத்தவரை முதியோர்கள் அதிக அளவில் புறக்கணிக்கப்படும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2023-ம் வருடத்துடன் ஒப்பிடும் போது சென்ற ஆண்டு இந்தியாவில் வாழும் முதியோர்களுக்கு எதிரான வன்கொடுமை 57%-லிருந்து 33% ஆக உயர்ந்துள்ளது. இதில் 68% ஆண்கள் மற்றும் 63% பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெருநகரங்களைப் பொறுத்தவரை அதிகபட்சமான வன்கொடுமை பெங்களுருவிலும் (82%), குறைந்தபட்ச வன்கொடுமை டெல்லியிலும் (27%) பதிவாகியுள்ளன. இதில் புறக்கணிப்பு (49%), அவமதிப்பு (63%), வாய்மொழி வசைமொழிகள் (71%) தவிரவும் உடல்ரீதியாகவும் முதியோர் துன்புறுத்தப்படுகின்றனர். இவர்களில் 77% தங்களைப் பாதுகாத்துக் கொள்ளக் காவல்துறையை அணுக வேண்டும் எனும் விழிப்புணர்வோடு தான் உள்ளனர். இருப்பினும், 16% மட்டுமே புகார் அளிக்க முன் வருகின்றனர்.
நகரங்களில் வசிக்கும் முதியோர்கள் தங்களைப் பெரிதும் கொடுமைப்படுத்துபவர்கள் மருமகள்கள் (71%) மற்றும் மகன்கள் (69%) எனத் தெரிவித்துள்ளனர். இருப்பினும் குடும்ப கவுரவத்தைப் பாதுகாக்கவே பல நேரங்களில் அத்து மீறல்களை மறைத்து வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர். முதியோரைப் பாதுகாக்க அவர்களுடைய பொருளாதாரச் சார்பின்மையை அதிகப்படுத்துதல், தலைமுறை இடைவெளியைக் குறைக்கும் வகையில் இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், முதியோருக்கு உதவ சுய உதவிக் குழுக்களை நியமிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே இந்நாளின் குறிக்கோள் ஆகும்.
இதனிடையே முதியோர் நலன் காக்க தெருவோரங்களில் வயதான பெரியவர்கள் ஆதரவின்றி இருக்கும் முதியவர்களுக்கு உதவுவதற்கு என்றே '1253' ஹெல்ப் லைன் உள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆதரவற்ற முதியவர்களுக்கு இந்த ஹெல்ப் லைனில் தொடர்பு கொண்டு விவரத்தைச் சொல்லி அவர்களுக்கு உதவலாம். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் '1800 180 1253' என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம் என எம்பவர் சங்கர் கூறினார். நிகழ்ச்சியில் எம்பவர் இந்தியா மேலாளர் லலிதாம்பிகை நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










