» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதல்: காவலாளி பரிதாப சாவு!

ஞாயிறு 15, ஜூன் 2025 10:16:22 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் காவலாளி பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி போல்டன் புரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் துரைசிங்கம் (58), இவர் முக்காணியில் உள்ள ஹோட்டலில் இரவு வாட்ச்மேன் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தனது பைக்கில் புறப்பட்டு தூத்துக்குடி -திருச்செந்தூர் ரோடு  முத்தையாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் இவரது பைக் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து, காரை ஓட்டி வந்த நாகர்கோவில் நாவல்காடு மேல தெருவைச் சேர்ந்த சோமு மகன் முருகன் (42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory