» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதல்: காவலாளி பரிதாப சாவு!
ஞாயிறு 15, ஜூன் 2025 10:16:22 AM (IST)
தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் காவலாளி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி போல்டன் புரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் துரைசிங்கம் (58), இவர் முக்காணியில் உள்ள ஹோட்டலில் இரவு வாட்ச்மேன் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தனது பைக்கில் புறப்பட்டு தூத்துக்குடி -திருச்செந்தூர் ரோடு முத்தையாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் இவரது பைக் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து, காரை ஓட்டி வந்த நாகர்கோவில் நாவல்காடு மேல தெருவைச் சேர்ந்த சோமு மகன் முருகன் (42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










