» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: நாளை கடலுக்குச் செல்லும் மீனவா்கள்!

ஞாயிறு 15, ஜூன் 2025 9:21:03 AM (IST)

தூத்துக்குடியில் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததால், விசைப்படகு மீனவா்கள் நாளை (ஜூன் 16) கடலுக்குச் செல்ல உள்ளனர். 

மீன்களின் இனப்பெருக்கத்தைக் கருத்தில்கொண்டு, வங்கக் கடலில் ஆண்டுதோறும் ஏப். 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு தடைக்காலம் தொடங்கி, சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் நிறைவடைந்தது.

இதனால், தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தில், மீனவா்கள் கடலுக்கு செல்வதற்காக தங்களது படகுகளில் பல்வேறு பராமரிப்புப் பணிகளை செய்து சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டனா். மீன்பிடி வலைகள், மிதவைகளைத் தயாா் செய்து படகுகளில் ஏற்றும் பணியிலும் ஈடுபட்டனா்.

தடைக்காலம் முடிந்த நிலையில், மீனவா்கள் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் செல்ல மாட்டாா்கள் என்பதால், நாளை (ஜூன் 16) திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு கடலுக்குச் செல்ல உள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory