» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: நாளை கடலுக்குச் செல்லும் மீனவா்கள்!
ஞாயிறு 15, ஜூன் 2025 9:21:03 AM (IST)
தூத்துக்குடியில் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததால், விசைப்படகு மீனவா்கள் நாளை (ஜூன் 16) கடலுக்குச் செல்ல உள்ளனர்.
மீன்களின் இனப்பெருக்கத்தைக் கருத்தில்கொண்டு, வங்கக் கடலில் ஆண்டுதோறும் ஏப். 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு தடைக்காலம் தொடங்கி, சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் நிறைவடைந்தது.
இதனால், தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தில், மீனவா்கள் கடலுக்கு செல்வதற்காக தங்களது படகுகளில் பல்வேறு பராமரிப்புப் பணிகளை செய்து சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டனா். மீன்பிடி வலைகள், மிதவைகளைத் தயாா் செய்து படகுகளில் ஏற்றும் பணியிலும் ஈடுபட்டனா்.
தடைக்காலம் முடிந்த நிலையில், மீனவா்கள் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் செல்ல மாட்டாா்கள் என்பதால், நாளை (ஜூன் 16) திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு கடலுக்குச் செல்ல உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










