» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க கனிமொழி எம்பி நடவடிக்கை: விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
சனி 14, ஜூன் 2025 11:53:18 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க கனிமொழி எம்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் அ.வரதராஜன், கனிமொழி எம்பிக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2024 டிசம்பர் மாதம் 12 மற்றும் 14 ஆகிய தினங்களில் பெய்த பெரு மழைக்கு மானாவாரி பயிர்களான உளுந்து, பாசி, வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி பயிர்கள் கடுமையாக சேதமடைந்து விவசாயிகள் கடும் நஸ்டத்திற்கு உள்ளாளர்கள். நவம்பர் மாதம் பெஞ்சல் புயலுக்கு பாதிக்கப்பட்ட வட மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு விட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து வருவாய் துறையால் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. ஐந்து மாதங்களாகியும் நிவாரணம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவில்லை. 59 கோடி ரூபாய் நிவாரணம் கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்து வருகிறார். அடுத்த பருவத்திற்கு கோடை உழவு கூட செய்ய முடியாமல் மிகவும் கஸ்டப்படுகின்றனர். நிவாரணம் பெற்றுத்தர கனிமொழி எம்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)











சண்முகவேல் விவசாயி மகன்Jun 14, 2025 - 02:00:19 PM | Posted IP 162.1*****