» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு மையம் சார்பில் பள்ளிக்கு நிதியுதவி!

சனி 14, ஜூன் 2025 11:16:49 AM (IST)



புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சீரமைப்பு பணிகளுக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு மையத்தின் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் டிவிஎஸ் சீனிவாசன் சேவை அறக்கட்டளை சார்பாக ரூ.14.78, இலட்சம் மதிப்பில் மாணவர்கள் பல்நோக்கு அரங்கம், இரண்டு புதிய கழிப்பறைகள் கட்டுதல், இரண்டு புதிய இரண்டு சிறுநீர் கழிப்பறைகள் கட்டுதல், நான்கு பழைய கழிப்பறைககள் பழுது பார்த்தல், நடைபாதைகளில் தள கற்கள் பதித்தல், பத்து நல்லியுடன் கூடிய கை கழுவும் இடங்கள் அமைத்தல்  உட்பட பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளது.

இப்பணிக்கு மக்களின் பங்களிப்பு 15% தொகையில் ரூ.1 லட்சத்து  70 ஆயிரம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு மையத்தின் மூலம் காசோலையாக நேற்று வழங்கப்பட்டது. பள்ளியின் கோரிக்கையினை ஏற்று வளர்ச்சிக்காக நல் உள்ளத்தோடு நிதியுதவி வழங்கிய சகோ.மோகன் சி. லாசரஸ், மற்றும் இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் இப்பணிக்கு புறையூர் வெல்ஃபர் டிரஸ்ட் மூலமாக ரூ.50ஆயிரம் காசோலை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory