» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாழை விவசாயத்தில் நஷ்டம்: விவசாயி விஷம் குடித்து தற்கொலை

சனி 14, ஜூன் 2025 8:58:46 AM (IST)

சாத்தான்குளம் அருகே வாழை விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள வேலன்புதுக்குளத்தை சேர்ந்த நல்லகண்ணு மகன் பரமசிவன் (44). விவசாயி. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவருக்கு சொந்தமான 4½ ஏக்கரில் வாழை பயிரிட்டு பயிரிட்டுள்ளார். அப்பகுதியில் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காததால், ஆழ்துளை கிணறு அமைத்துள்ளார். 

ஆனால் அந்த கிணற்றில் போதிய தண்ணீர் கிடைக்கவில்லையாம். தொடர்ந்து 2-வது ஆழ்துளை கிணறு அமைத்தாராம். அதிலும் போதிய தண்ணீர் இல்லையாம். இந்நிலையில் கிடைத்த தண்ணீரை கொண்டு வாழை தோட்டத்தை பராமரித்து வந்துள்ளார். இதில் ஓரளவு பயன்கிடைத்து, வாழை அறுவடைக்கு தயாராகியுள்ளது. வாழைத்தார்களை அறுவடை செய்துவிற்பனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் வாழைத்தார்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லையாம். 

ஏற்கனவே, 2 ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் கிடைக்காத நிலையில், அறுவடை செய்த வாழைத்தார்களுக்கும் போதிய விலை கிடைக்காததால், கடுமையான நஷ்டத்தை சந்தித்த அவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாமல் நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி ராதா அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

BenistonJun 14, 2025 - 09:12:05 AM | Posted IP 162.1*****

Adress

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory