» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரிவாளை காட்டி கொலை மிரட்டல்: 2 போ் கைது

வெள்ளி 13, ஜூன் 2025 8:07:15 AM (IST)

கோவில்பட்டியில் அரிவாளை காட்டி பொதுமக்கள் மற்றும்  போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் புதுக்கிராமம், இலுப்பையூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேலாயுதபுரம் வேளாண்மை பல்கலைக்கழகம் அருகே 2 இளைஞர்கள் அரிவாளுடன் நின்றுகொண்டு பொதுமக்களை மிரட்டுவதாக அவர்களுக்கு தகவல் கிடைத்ததாம்.

அங்கு சென்ற போலீசார், அந்த இளைஞர்களை பிடிக்க முயன்றனராம், அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம். எனினும், அவர்களை மடக்கி பிடித்து அரிவாளை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்ததில், வேலாயுதபுரம் 2ஆவது தெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் ராம்குமார் (20), கருணாநிதி நகர் 3ஆவது தெருவை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் மகன் மாதவன் (20) ஆகியோர் எனத் தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory