» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

வியாழன் 12, ஜூன் 2025 8:25:12 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்து முதிர்வு தொகை பெறாத பயனாளிகள் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 3 வயதுக்குள் குடும்ப கட்டுப்பாட்டு சான்றிதழ், வருமானச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், இரண்டு பெண் குழந்தைகளின் பிறப்புச்சான்று ஆகியவற்றுடன் அரசு இ- சேவை மையத்தில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். 

மேலும் 18 வயது பூர்த்தி அடைந்து முதிர்வு தொகை பெறாத பயனாளிகள் முதிர்வு தொகை பெறும் பொருட்டு பயனாளியின் வைப்புத்தொகை இரசீது நகல், பத்தாம் வகுப்பு சான்றிதழ் நகல், குழந்தையின் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்திலோ அந்தந்த பகுதயில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திலோ சமர்ப்பித்து முதிர்வு தொகை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

S GracyJun 14, 2025 - 10:34:27 PM | Posted IP 104.2*****

Update

S GracyJun 14, 2025 - 10:33:56 PM | Posted IP 162.1*****

Update

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory