» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா: பொம்மலாட்ட நிகழ்வு

வியாழன் 12, ஜூன் 2025 3:22:51 PM (IST)



தமிழகத்தோடு குமரி மாவட்டத்தை இணைக்க போராடி வெற்றி கண்ட மார்ஷல் நேசமணி பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் குழந்தைகளுக்கான பொம்மலாட்ட நிகழ்வு நடைபெற்றது.

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் செல்போனினால் ஏற்படும் தீமைகளை பற்றி எடுத்துக் கூறி புத்தகங்களை வாசிக்க சொல்லும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர்  ஜெயவேணி  தலைமை தாங்கினார். காமராஜர் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட தலைவர் லாரன்ஸ்  முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி கலையின் குரல் நிறுவனர் சக்திவேல், குமிழ் முனை புத்தக வண்டி நிறுவனர் சைமன், புத்தக வாசிப்பு நற்பணி மன்ற மாவட்ட தலைவர் மாரிமுத்து ஆகியோர் இணைந்து மாபெரும் பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினர். ஏற்பாடுகளை காமராஜர் நற்பணி மன்றம் தலைவர் லாரன்ஸ் செயலாளர் வழக்கறிஞர் சிலுவை, பொருளாளர் ஆஸ்வால்ட், அமைப்பாளர் ரவி ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory