» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு உயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கல்!

வியாழன் 12, ஜூன் 2025 3:14:16 PM (IST)



தமிழ்நாடு கிராம வங்கி நாசரேத் கிளை சார்பில்   அரசு உயிர்  காப்பீடு  திட்ட  காசோலை  வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு கிராம வங்கி கிளையில் வாடிக்கையாளரான திருக்களூர் கக்கன்ஜி நகரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (31)  பிரதம மந்திரி காப்பீடு திட்டமான பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற திட்டத்தில் காப்பீடு செய்திருந்தார். 

இவர் கடந்த 28.03.2025 அன்று உடல் நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது வாரிசுதாரரான தாயார் லட்சுமிக்கு காப்பீடு ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வங்கி ஊழியர்கள் தாயார் லட்சுமியிடம் காப்பீடு தொகை ரூ. 2லட்சத்துக்கான காசோலை வழங்கினர். 

நிகழ்ச்சியில் வங்கியின் நிதிசார் கல்வி மைய ஆலோசகர் முருகேசன் கலந்து கொண்டு அரசு உயிர் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு பற்றி அந்த பகுதி மக்களுக்கு எடுத்துரைத்தார்‌. இதில் தமிழ் நாடு கிராம வங்கி நாசரேத் கிளை மேலாளர் நிறைமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்வேதா, டிவிஎஸ் வட்டார உதவியாளர்கள் அருள் ராமேஸ்வரி, கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory