» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆவின் பாலகத்தில் பூட்டை உடைத்து திருட்டு: போலீஸ் விசாரணை!

வியாழன் 12, ஜூன் 2025 10:50:32 AM (IST)

தூத்துக்குடியில் ஆவின் பாலகத்தில் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி பி&டி காலனி 5வது தெருவைச் சேர்ந்தவர் ராமஜெயம் மகன் சற்குணராஜ் (38). இவர் அப்பகுதியில் ஆவின் பாலகம் மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார், இவர் நேற்று இரவு 11 மணிக்கு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை 4 மணியளவில் கடையில் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. 

அப்போது பால் சப்ளை செய்ய வந்த வாகனத்தின் ஓட்டுநர், சற்குணராஜ்க்கு போன் செய்து இதுகுறித்து தகவல் கூறியுள்ளார். இதையடுத்து சற்குணராஜ் வந்து பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த சுமார் ரூ.8ஆயிரம் பணம் திருடு போகியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory