» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஆவின் பாலகத்தில் பூட்டை உடைத்து திருட்டு: போலீஸ் விசாரணை!
வியாழன் 12, ஜூன் 2025 10:50:32 AM (IST)
தூத்துக்குடியில் ஆவின் பாலகத்தில் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பி&டி காலனி 5வது தெருவைச் சேர்ந்தவர் ராமஜெயம் மகன் சற்குணராஜ் (38). இவர் அப்பகுதியில் ஆவின் பாலகம் மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார், இவர் நேற்று இரவு 11 மணிக்கு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை 4 மணியளவில் கடையில் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.
அப்போது பால் சப்ளை செய்ய வந்த வாகனத்தின் ஓட்டுநர், சற்குணராஜ்க்கு போன் செய்து இதுகுறித்து தகவல் கூறியுள்ளார். இதையடுத்து சற்குணராஜ் வந்து பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த சுமார் ரூ.8ஆயிரம் பணம் திருடு போகியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










