» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எட்டையபுரம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட வேண்டும்: அதிமுக வலியுறுத்தல்!

வியாழன் 12, ஜூன் 2025 10:04:27 AM (IST)



எட்டையபுரம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட வேண்டும் என்று அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம்  பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் பொது மக்களின் அடிப்படை வசதி பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதாகவும், பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்கவும், கொசுக்கடி மற்றும் சுகாதார சீர்கேடுகளில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திடவும் மற்றும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் பொதுமக்கள் எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் தொடர்ந்து எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கான அடிப்படைத் தேவை பணிகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வரும் பட்சத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ ஆலோசனையின் பேரில் பொது மக்களை திரட்டி அதிமுக சார்பில் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் விரைவில் நடத்தப்படும் என எட்டயபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory