» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை கழிவுகளை அகற்றும் பணி : உயர்நீதிமன்றம் கெடு

வியாழன் 12, ஜூன் 2025 8:41:58 AM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வளாகத்தில் உள்ள அபாயகரமான கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்ள நிறுவனங்களை தேர்வு செய்வதற்கு 2 வாரங்களில் குழு அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசு இழுத்து மூடியது.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் அபாயகரமான கழிவுகள் தேங்கி கிடப்பதாகவும், இதனால் அப்பகுதியில் நிலம் மாசு அடைந்து வருவதால், ஆலையை இடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், சமூக ஆர்வலரான பேராசிரியர் பாத்திமா வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், ‘ஆலை வளாகத்தில் உள்ள அபாயகரமான கழிவுகளை அகற்றி நிலத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்றும் கூயிருந்தார்.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள மாசுவை அகற்றுவதற்காக, தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (நீரி), எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனம் (டெரி), இ.ஆர். எம். இந்தியா பிரைவேட் லிமிடெட், ஸ்ட்ராட்ஸ் என்விரான்மென்டல் பிரைவேட் லிமிடெட் ஆகிய 4 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த அறிக்கைக்கு மனுதாரர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களில் ஒரு நிறுவனமான 'நீரி' ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆலோசனைகள் வழங்கிய நிறுவனம் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ''ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள மாசுவை அகற்றுவதற்கான பணிகளை எந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கலாம் என்பது குறித்து முடிவு செய்வதற்காக, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் தலைமையில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய மூத்த விஞ்ஞானி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர், மும்பை ஐ.ஐ.டி. நிபுணர் அடங்கிய குழுவை தமிழ்நாடு அரசு 2 வாரங்களில் அமைக்க வேண்டும்.

இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில், ஸ்டெர்லைட் ஆலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும். இந்த வழக்கை வருகிற ஆகஸ்டு 13-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்'' என்று உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory