» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கார் டயர் வெடித்து விபத்து: தலைமையாசிரியர் பலி

வியாழன் 12, ஜூன் 2025 8:16:34 AM (IST)



கயத்தாறு அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த தலைமையாசிரியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர்ராஜன் ஜான் (57). ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்தார். தனது மனைவி ஜோன் எஸ்தருடன் (50), விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் செவ்வாய்க்கிழமை சென்ற ராஜன் ஜான், பின்னர் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

கயத்தாறையடுத்த சவாலாப்பேரி அருகே மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, காரின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டு விழுந்தது. இதில் ராஜன் ஜான், எஸ்தர் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜன் ஜான் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory