» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.120.53 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் தொடக்கம்
வியாழன் 12, ஜூன் 2025 8:12:36 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.120.53 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்துள்ள பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.120.53 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்துள்ள பாதாள சாக்கடை திட்டப் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, மாநகராட்சி 3ஆவது வார்டு கேடிசி நகர் கழிவு நீர் உந்தும நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கோட்டாட்சியர் பிரபு தலைமை வகித்தார். மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.சி.சண்முகையா எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆணையர் மதுபாலன் வரவேற்றார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் வெங்கடேஷ் திட்ட விளக்கவுரையாற்றினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதாஜீவன், பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் சுரேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, சுப்புலட்சுமி, வைதேகி, நாகேஸ்வரி, ஜெயசீலி, தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மார்ஷலி உள்பட பலர் பங்கேற்றனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










