» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது: 2 பைக்குகள் பறிமுதல்!

வியாழன் 12, ஜூன் 2025 8:02:54 AM (IST)

கோவில்பட்டி அருகே 320 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளை சிலர் பதுக்கிவைத்து விற்பதாக கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.

அப்போது, பாண்டவர்மங்கலம் ஊராட்சிப் பகுதியில் உள்ள ஊருணி அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 பைக்குகளில் 320 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக புதியம்புத்தூர் நயினார்புரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த கொம்பையா மகன் முருகன் என்ற யமஹா முருகன் (47) என்பவரைப் பிடித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் முருகனை கைது செய்து, 2 பைக்குகள், ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.

முருகன், ராஜீவ் நகர் 6ஆவது தெருவில் வசித்து வருவதாகவும், அவர் மீது தாளமுத்துநகர், சாத்தூர், புதியம்புத்தூர், புதுக்கோட்டை, சிப்காட், உவரி, சீவலப்பேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கஞ்சா, வெடிகுண்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory