» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெய்தல் கலைத் திருவிழா ஆயத்த பணிகள் : மேயர் ஆய்வு

புதன் 11, ஜூன் 2025 9:17:39 PM (IST)



தூத்துக்குடியில் ஜூன் 13ஆம் தேதி துவங்க உள்ள நெய்தல் திருவிழா ஆயத்த பணிகள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களின் ஏற்பாட்டில் தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் நெய்தல் கலைத் திருவிழாவானது தூத்துக்குடி வஉசி கல்லூரி மைதானத்தில் ஜூன் 13ஆம் முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்காக நடைபெற்று வரும் ஆயத்தப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம் என தெரிவித்தார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory