» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 1800 கிலோ ரேஷன் பறிமுதல்: டிரைவர் கைது

புதன் 11, ஜூன் 2025 10:30:45 AM (IST)



தூத்துக்குடியில் சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 1800 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர். 

தூத்துக்குடியில் கடலோர காவல் படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் கிழக்கு கடற்கரை சாலைரோட்டில் வெள்ளப்பட்டி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அதிகாலை 3 மணி அளவில் வந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். 

அதில் 40 சாக்கு பைகளில் மொத்தம் 1800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது, இந்த ரேஷன் அரிசியை வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் செல்வகுமார் (33) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட ரேஷன் அரிசு மற்றும் வாகனம் உணவு பாதுகாப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory