» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மது குடித்ததை கண்டித்தால் வாலிபர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!

புதன் 11, ஜூன் 2025 10:26:15 AM (IST)

தூத்துக்குடியில் மது குடித்ததை குடும்பத்தினர் கண்டித்தால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி முள்ளக்காடு நேருஜி நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து - பேச்சியம்மாள். தம்பதியரின் 4வது மகன் பொன் சிவராஜ் (25) இவர் அங்குள்ள பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் கடந்த 8ம் தேதி இவர்கள் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தியுள்ளனர்.

அன்றைய தினம் பொன் சிவராஜ் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை குடும்பத்தினர் கண்டித்தார்களாம். இதனால் மன வேதனையடைந்த வாலிபர் தனது  படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory