» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 11, ஜூன் 2025 10:05:29 AM (IST)

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கோவில்பிள்ளை விளை, பால்பண்ணை அருகே நின்று கொண்டிருந்த 2பேரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது, அவர்கள் பேண்ட் பாக்கெட்டில் விற்பனைக்காக கஞ்சாவை மறைத்து வைத்து இருப்பது தெரியவந்தது.
மேலும், போலீஸ் விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி வெற்றிவேல்புரம், சிவாரஜபுரத்தைச் சேர்ந்த பார்த்திபன் மகன் மரிய பிலிப் மார்க்லின் (26), கலைஞர் நகர் ஆறுமுகசாமி மகன் வேல்குமார் 25 எனத் தெரியவந்தது. அவர்கள் 2பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 20 கிராம் கஞ்சா மற்றும் யமஹா பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










