» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடிநீர் விரயம்: சமூக ஆர்வலர்கள் நூதன போராட்டம்

சனி 24, மே 2025 10:46:56 AM (IST)



தூத்துக்குடி அருகே சாயர்புரம் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் நூதன போராட்டம் நடத்தினர். 

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் மெயின் ரோட்டில் உள்ள தூய மார்ட்டின் தொடக்கப்பள்ளி அருகில் கடந்த இரண்டு மாதங்களாக மங்களக்குறிச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு குடிநீர் செல்லும் குழாய் உடைந்து வீணாகி வருகிறது. பலமுறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்  தண்ணீர் தேங்கி வருகிறது.

சாலையில் பள்ளம் ஏற்பட்டு தேங்கி கிடக்கும் தண்ணிரால்  பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது‌. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த பெண் ஒருவர் இந்த பள்ளத்தில் விழுந்து இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை கண்டித்து சாயர்புரம் சமூக ஆர்வலர் அமிர்தராஜ் தலைமையில் குழுவினர்கள் கப்பல் விட்டு நூதன போராட்டம் நடத்தினர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு குழாய் உடைப்பு தண்ணீரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education




New Shape Tailors



Thoothukudi Business Directory