» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடிநீர் விரயம்: சமூக ஆர்வலர்கள் நூதன போராட்டம்
சனி 24, மே 2025 10:46:56 AM (IST)

தூத்துக்குடி அருகே சாயர்புரம் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் நூதன போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் மெயின் ரோட்டில் உள்ள தூய மார்ட்டின் தொடக்கப்பள்ளி அருகில் கடந்த இரண்டு மாதங்களாக மங்களக்குறிச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு குடிநீர் செல்லும் குழாய் உடைந்து வீணாகி வருகிறது. பலமுறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தண்ணீர் தேங்கி வருகிறது.
சாலையில் பள்ளம் ஏற்பட்டு தேங்கி கிடக்கும் தண்ணிரால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த பெண் ஒருவர் இந்த பள்ளத்தில் விழுந்து இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை கண்டித்து சாயர்புரம் சமூக ஆர்வலர் அமிர்தராஜ் தலைமையில் குழுவினர்கள் கப்பல் விட்டு நூதன போராட்டம் நடத்தினர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு குழாய் உடைப்பு தண்ணீரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










