» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவன் விஷம் குடித்து தற்கொலை
சனி 24, மே 2025 8:39:40 AM (IST)
சாத்தான்குளம் அருகே, நண்பர்களை விட்டு பிரிந்து வெளியூர் செல்ல விருப்பமின்றி மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை புதுக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த முத்துகண்ணன், ஊரில் இருந்து விவசாயத்தை கவனித்து வந்த இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் வேலை கிடைத்து பார்த்து வருகிறார். . மனைவி பூர்ணிதேவி உள்ளிட்ட 3 மகள்கள் உள்ளூரில் இருந்து படித்து வந்தனர்.
முத்துக்கண்ணன் சென்னையில் இருந்ததால் அங்கேயே குடும்த்துடன் செல்ல இருந்ததாக தெரிகிறது. இதற்கு மூத்த மகன் இஷாந்த் (14) என்பவர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளுரிலேயே இருந்து பள்ளியில் படிக்க வேண்டும் என கூறி வந்ததாக தெரிகிறது. மேலும், இங்குள்ள பள்ளிக்கூடத்திலேயே படிப்பை ெதாடரவும், சக நண்பர்களை பிரிந்து செல்லவும் விருப்பம் இல்லை என்றும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
ஆனால் பெற்றோர் சென்னையில் படிக்க வேண்டும் என கூறியதால் விரக்தி அடைந்த மாணவன் இஷாந்த், வயலில் இருந்த கலைகொல்லி மருந்தை எடுத்து நேற்று காலை குடித்து மயங்கி கிடந்துள்ளார். உடன் உறவினர்கள் அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இஷாந்த் உயிரிழந்தார்.. இதுகுறித்த அவரது தாயார் பூர்ணிமா தேவி அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொரியர் பார்சலில் வந்த 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் : போலீசார் விசாரணை!
வியாழன் 11, டிசம்பர் 2025 9:19:00 PM (IST)

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை எதிர்த்து பார் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
வியாழன் 11, டிசம்பர் 2025 8:54:06 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி மயானத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற கோரிக்கை!
வியாழன் 11, டிசம்பர் 2025 8:46:53 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு!
வியாழன் 11, டிசம்பர் 2025 8:30:35 PM (IST)

உயர் மின்னழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் சேதம் : இழப்பீடு வழங்க மக்கள் கோரிக்கை!
வியாழன் 11, டிசம்பர் 2025 8:24:52 PM (IST)

ஓய்வூதியப் பலன்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வியாழன் 11, டிசம்பர் 2025 8:18:53 PM (IST)










