» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் துப்பாக்கி முனையில் ரவுடி கைது : பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!!
சனி 24, மே 2025 8:22:31 AM (IST)
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் துப்பாக்கி முனையில் ரவுடியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில், கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆயுதங்களுடன் மர்ம நபர் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை காவல் ஆய்வாளர் ராஜபிரபு, வடபாகம் காவல் ஆய்வாளர் பாலமுருகன், காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்றபோது, வாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருந்த தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அந்தோணி மைக்கேல் சுகந்தன் (40) என்பவரை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவரிடமிருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அந்தோணி மைக்கேல் சுகந்தன் மீது கொலை வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










