» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கிணற்றில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயனைப்பு வீரர்களுக்கு பாராட்டு!!
திங்கள் 19, மே 2025 9:12:26 PM (IST)

மீரான்குளம் கிணற்றில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணியிலும் நகைகளை மீட்கும் பணியிலும் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களுக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், மீரான்குளத்தில் ஆம்னி வேனில் வந்தவர்கள் கிணற்றுக்குள் விழுந்து 5பேர் உயிரிழந்த நிலையில், சடலங்களை மீட்கும் பணியிலும், மறுநாள் 35 சவரன் நகைகளை மீட்கும் பணியிலும் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். குழந்தையின் சடலத்தையும் மீட்பதற்கும், நகைகள் அடங்கிய பையினை மீட்கவும் சாத்தான்குளம் தீயணைப்பு படையை சேர்ந்த வீரர் சதிஷ்குமார் கிணற்றுக்குள் இறங்கி தனது பணியினை திறம்பட செய்தார்.
மீட்பு பணியில் சாத்தான்குளம், திசையன்விளை, தூத்துக்குடி, பாளையங்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களும், தீயணைப்பு படை வீரர்களும் வருகை தந்து தங்களது வேலைகளை சிறப்பாக மேற்கொண்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தங்களது உயிரை துச்சமாக மதித்து கிணற்றுக்குள் இறங்கி சடலங்களை வெளியே எடுத்தும், நகைகளை மீட்டும் கொடுத்த வேலை செய்த அனைத்து தீயணைப்பு படை வீரர்களுக்கும் தங்களது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ் வழங்கிட சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:20:33 PM (IST)

ஜன.14ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் : முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:08:26 PM (IST)

சுற்றுச்சுழலைப் பாதிக்காத வகையில் போகி பண்டிகை கொண்டாட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:47:24 PM (IST)

நல்லாயன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:36:12 PM (IST)

கோவில்பட்டியில் களைகட்டிய பொங்கல் விழா : இளவட்டக்கல் தூக்கி அசத்திய மாணவர்கள்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:05:23 PM (IST)

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:02:18 PM (IST)








