» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து: 45 பவுன் நகைகள் மீட்பு

ஞாயிறு 18, மே 2025 6:58:59 PM (IST)



சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5பேர் உயிரிழந்த நிலையில், கிணற்றுக்குள் இருந்த 45 சவரன் நகைகள் மற்றும் பொருட்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழநதனர். அவர்களது உறவினர்கள் அளித்த தகவலின்படி கிணற்றுக்குள் மூழ்கி கிடக்கும் சுமார் சவரன் நகைகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. உள்ளூரில் இருந்து மோட்டார் வரவழைக்கப்பட்டு கிணற்றிலிருந்து நீரை அகற்றப்பட்டது. அதன் பிறகு கிணற்றுக்குள் இறங்கிய   தீயணைப்பு வீரர் கிணற்றுக்குள் கிடந்த இரு பைகளை மீட்டு  மேலே அனுப்பினார்.

அதன்படி கண்டெடுக்கப்பட்ட பையில் இருந்து சுமார் 35 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் அனிதா,  சாத்தான்குளம் காவல்துறை சார்பாக உதவி ஆய்வாளர்கள் ஸ்ரீதர், செல்வராஜ், காவலர் ஆனந்தகுமார் மற்றும் பலர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். உடனடியாக களத்தில் இறங்கி செயல்பட்டு நகைகளை மீட்ட தீனைப்பு படை வீரர்களுக்கும் காவல் துறையினருக்கும் வருவாய் துறையினற்கும் அப்பகுதி மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory