» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் போக்குவரத்து சிக்னலை விரைந்து செயல்படுத்த வேண்டும் : சிபிஎம் கோரிக்கை!
ஞாயிறு 18, மே 2025 11:55:44 AM (IST)
தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை "தூத்துக்குடி குரூஸ் பார்னாந்து சிலை அருகே பொருதப்பட்டுள்ள போக்கு வரத்து சிக்னல் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. இப்பகுதி வியாபார ஸ்தலமாக இருப்பதலும் பிரதான சாலையை இணைப்பதாலும் போக்குவரத்து நெருக்கடிக்கடி உள்ள பகுதியாகும். விடுமுறை நாளில் இது மேலும் அதிகரிக்கும். சமீபத்தில் போக்குவரத்து சிக்னல் இல்லாததால் தனியாக காவலர் மூலம் கையாள்வது மிகச் சிரமமாகும்.
மேலும் வாகன ஓட்டிகள் சிக்னலுக்கு பழக்கப்பட்டுளதால் மிகுந்த சிரமத்துள்ளாகியுள்ளனர். ஆகவே சிறு சிறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் இதில் தலையிட்டு விரைந்து போக்குவரத்து சிக்னலை சரி செய்யுமாறும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரக்குழு சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா : 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்
செவ்வாய் 24, ஜூன் 2025 8:41:25 PM (IST)

நாசரேத் சாலமோன் பள்ளியில் முப்பெரும் விழா
செவ்வாய் 24, ஜூன் 2025 8:14:59 PM (IST)

தேவாலயத்தில் ஜாக்கி மூலம் கன்வென்சன் கூட்ட மேடை 3 அடி உயர்த்தும் பணி தொடக்கம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 8:02:55 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 7:57:27 PM (IST)

திருச்செந்தூர் குடமுழுக்கு விழா பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்
செவ்வாய் 24, ஜூன் 2025 5:50:26 PM (IST)

நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 24, ஜூன் 2025 5:33:09 PM (IST)
