» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமண விழாவுக்கு வந்த வாலிபர் லாரி மோதி பலி : கோவில்பட்டியில் பரிதாபம்
ஞாயிறு 18, மே 2025 10:57:41 AM (IST)
கோவில்பட்டியில் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த வாலிபர் லாரி மோதி பரிதாபமாக இறந்தார்
சென்னை திருமங்கலத்தை சேர்ந்தவர் ராகவன் மகன் பாலாஜி (25), தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று காலை நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து பேருந்தில் புறப்பட்டு இன்று காலை 4மணி அளவில் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினார்.
பின்னர் பழைய பேருந்து நிலையத்திற்கு வருவதற்காக ரோட்டை கடக்க முயன்ற போது திருநெல்வேலியில் இருந்து வெம்பக்கோட்டை சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு வாகனம் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் காலை 6 மணி அளவில் பரிதாபமாக இறந்தார்
இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த வெம்பக்கோட்டை ஆலங்குளம் சேர்ந்த காளிமுத்து மகன் சுரேஷ் குமார் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










