» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமண விழாவுக்கு வந்த வாலிபர் லாரி மோதி பலி : கோவில்பட்டியில் பரிதாபம்

ஞாயிறு 18, மே 2025 10:57:41 AM (IST)

கோவில்பட்டியில் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த வாலிபர் லாரி மோதி பரிதாபமாக இறந்தார் 

சென்னை திருமங்கலத்தை சேர்ந்தவர் ராகவன் மகன் பாலாஜி (25), தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று காலை நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து பேருந்தில்  புறப்பட்டு இன்று காலை 4மணி அளவில் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினார்.

பின்னர் பழைய பேருந்து நிலையத்திற்கு வருவதற்காக ரோட்டை கடக்க முயன்ற போது திருநெல்வேலியில் இருந்து வெம்பக்கோட்டை சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு வாகனம் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் காலை 6 மணி அளவில் பரிதாபமாக இறந்தார் 

இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த வெம்பக்கோட்டை ஆலங்குளம் சேர்ந்த காளிமுத்து மகன் சுரேஷ் குமார் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory