» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

ஞாயிறு 18, மே 2025 10:19:02 AM (IST)

தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி வி.இ. ரோட்டில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று காலையில் இந்த ஏ.டி.எம். மையத்துக்கு உள்ளே பாம்பு புகுந்தது. அங்கு பணம் எடுக்க சென்றவர்கள் பாம்பைக் கண்டதும் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். பின்னர் தூத்துக்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். 

உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஏ.டி.எம். எந்திரம் இருந்த அறையை நீண்ட நேரமாக சோதனை செய்தனர். ஆனால் பாம்பு சிக்கவில்லை. இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறும்போது, ‘‘சுமார் ஒரு அடி நீளத்திற்கும் குறைவான பாம்பு ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். இது விஷம் இல்லாத வகையை சேர்ந்தது. சிறிய இடைவெளியில் வெளியே சென்று இருக்கும். இதனால் பயப்படத் தேவையில்லை’’ என்றனர். தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்துக்குள் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory