» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
ஞாயிறு 18, மே 2025 10:19:02 AM (IST)
தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி வி.இ. ரோட்டில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று காலையில் இந்த ஏ.டி.எம். மையத்துக்கு உள்ளே பாம்பு புகுந்தது. அங்கு பணம் எடுக்க சென்றவர்கள் பாம்பைக் கண்டதும் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். பின்னர் தூத்துக்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஏ.டி.எம். எந்திரம் இருந்த அறையை நீண்ட நேரமாக சோதனை செய்தனர். ஆனால் பாம்பு சிக்கவில்லை. இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறும்போது, ‘‘சுமார் ஒரு அடி நீளத்திற்கும் குறைவான பாம்பு ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். இது விஷம் இல்லாத வகையை சேர்ந்தது. சிறிய இடைவெளியில் வெளியே சென்று இருக்கும். இதனால் பயப்படத் தேவையில்லை’’ என்றனர். தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்துக்குள் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










