» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 96.76% தேர்ச்சி : மாநிலத்தில் தூத்துக்குடி மூன்றாவது இடம்!
வெள்ளி 16, மே 2025 10:19:24 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் 10ஆம் வகுப்புத் தேர்வில் 96.76 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டம் 3வது இடம் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 308 பள்ளிகளில், 10,347 மாணவர்கள், 11,112 மாணவிகள் என மொத்தம் 21,459 பேர் தேர்வெழுதினர். அவர்களில் 9,867 மாணவர்கள், 10,897 மாணவிகள் என மொத்தம் 20,764 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் நிகழாண்டு 96.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 94.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். நிகழாண்டு தேர்ச்சி சதவீதம் 2.37 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மாநில அளவில் 9வது இடம் பிடித்த நிலையில் இந்த ஆண்டு 3வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் உள்ள 308 பள்ளிகளில் 161 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 89 அரசு பள்ளிகளில் 35 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது என்ன மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா : 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்
செவ்வாய் 24, ஜூன் 2025 8:41:25 PM (IST)

நாசரேத் சாலமோன் பள்ளியில் முப்பெரும் விழா
செவ்வாய் 24, ஜூன் 2025 8:14:59 PM (IST)

தேவாலயத்தில் ஜாக்கி மூலம் கன்வென்சன் கூட்ட மேடை 3 அடி உயர்த்தும் பணி தொடக்கம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 8:02:55 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 7:57:27 PM (IST)

திருச்செந்தூர் குடமுழுக்கு விழா பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்
செவ்வாய் 24, ஜூன் 2025 5:50:26 PM (IST)

நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 24, ஜூன் 2025 5:33:09 PM (IST)
