» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண நடவடிக்கை : ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை!

திங்கள் 12, மே 2025 11:20:20 AM (IST)



மாப்பிள்ளையூரணி பகுதியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நாங்கள் மாப்பிள்ளையூரணி கிராம எல்லைக்குற்பட்ட ஜாஹிர் உசேன் நகர் பகுதியில் 250 குடும்பங்களுக்கு வசித்து வருகிறோம். இந்த பகுதிகளில் உள்ள தெருக் குழாய்களில் கடந்த சில வருடங்களாகவே குடிநீர் விநியோகம் சீராக வருவதில்லை. மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருகிறது. 

அதிலும் சில குழாய்களில் தண்ணீர் சரியாக வருவதில்லை. ஆனால் சில முறைகள் 10 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக தண்ணீர் விநியோகம் செய்வதில்லை. அந்நாட்களில் தண்ணீர் இல்லாமல் மிகப்பெரும் துயரை எதிர்கொள்கிறோம். ஆகவே குடிநீர் பிரச்சனைக்கு ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory