» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குஜராத்தில் இருந்து தூத்துக்குடிக்கு 2,600 டன் உப்பு ரயில் மூலம் வந்தது
திங்கள் 12, மே 2025 8:55:34 AM (IST)
குஜராத்தில் இருந்து ரயில் மூலம் 2 ஆயிரத்து 600 டன் உப்பு தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உப்புத் தொழிலில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முடிவடைந்த உடன் உப்பள தொழிலாளர்கள் உப்பு உற்பத்திக்கான பணிகளை தொடங்கினர்.
அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் புதிய உப்பு வரத் தொடங்கியது. அதே நேரத்தில் அவ்வப்போது பெய்து வரும் கோடை மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த சில வாரமாக உப்பு உற்பத்தி நடந்து வந்தது. ஆனாலும் தேவைக்கு ஏற்ப உப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து குஜராத்தில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு உப்பு கொண்டு வரப்பட்டன. இந்த உப்பை தூத்துக்குடி வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து ரயிலில் கண்டெய்னர் மூலம் சுமார் 2 ஆயிரத்து 600 டன் பருமணி உப்பு தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த உப்பு தலா 50 கிலோ எடை கொண்ட சாக்கு மூட்டைகளை இருந்தன. இதனை வியாபாரிகள் லாரிகள் மூலம் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி விற்பனை செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)











Bala Balaமே 17, 2025 - 03:17:08 PM | Posted IP 172.7*****