» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓடைக்குள் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி: உறவினர் காயம்

சனி 10, மே 2025 8:44:01 AM (IST)

எட்டயபுரம் அருகே ஆட்டோ ஓடைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். மேலும் உறவினர் காயமடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள முதலிபட்டி கிழக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் குணசேகரன் (21). ஆட்டோ டிரைவர். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவரது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா மகன் சரவணகுமார் (31) என்பவரும் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சரவணக்குமார் ஆட்டோவிற்கு விளாத்திகுளத்தில் உதிரி பாகங்கள் வாங்குவதற்காக குணசேகரன் ஆட்ேடாவில் இருவரும் சென்றனர். ஆட்டோவை சரவணக்குமார் ஓட்டியுள்ளார். பேரிலோவன்பட்டி- சிங்கிலிபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ அருகில் உள்ள ஓடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோ பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பின்னால் அமர்ந்திருந்த குணசேகரன் படுகாயம் அடைந்தார். சரவணக்குமார் லேசான காயத்துடன் தப்பினார். அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று ஓடைக்குள் கிடந்த குணசேகரனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory