» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலக்கியச் சாரல் சார்பில் தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா
சனி 19, ஏப்ரல் 2025 8:10:35 PM (IST)

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தில் இலக்கியச் சாரல் சார்பில் பாட்டு மன்றம் மற்றும் ஓய்வு பெறும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.
சகாராவை தாண்டாத ஒட்டகம் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பயிற்சி மைய நிறுவனர் ந. தினகரன் சார்பில் தொடங்கப்பட்ட தமிழ்த் தொண்டு நிறுவனமான 'இலக்கியச் சாரல்' சார்பில் இரண்டாவது நிகழ்வாக "திரையிசைப் பாடல்களில் மக்கள் உள்ளம் கவர்ந்தவர்கள் பாடகர்களே! பாடகிகளே! என்ற பாட்டரங்கம் கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தில் இசை எஃப் எம். கோ. சுரேஷ்குமார் மற்றும் அகுபஞ்சர் மருத்துவர் சேதுராமன் முன்னிலையில் கிரீன் வே பவுன்டேசன் நிறுவனர் சரஸ்வதி தலைமையில் நடந்தது
நந்தலாலா சந்திரசேகர் வாழ்த்துப்பாடல் பாட, தமிழாசிரியை தங்கத்துரையரசி வாழ்த்துரை வழங்க நடுவராக தமிழ்ச் செம்மல் இரா.இராசு பேச்சாளர்களாக ஆசிரியை கண்ணகி, தேசிய நல்லாசிரியை விநாயக சுந்தரி, கொங்கராயக்குறிச்சி தமிழாசிரியை பார்வதி, தமிழ்ப்பணிச் செம்மல் பிரபு, முருகசரஸ்வதி, ஆசிரியை மணிமொழி மங்கை, வானொலி புகழ் கிருஷ்ணன், வானொலி புகழ் சுப்புலட்சுமி மற்றும் வரகவி நல்லாசிரியர் மா. முருகேசன்வேதாரண்யம் அரசுக் கல்லூரி முதல்வர் டாக்டர் மா.காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பாட்டுகளைப் பாடி மக்களை மகிழ்வித்தனர்.
தொடர்ந்து ஓய்வு பெறும் நல்லாசிரியர் தலைமை ஆசிரியர் வரகவி ம. முருகேசனுக்கு பாராட்டு விழா நடந்தது. பொன்னாடை அணிவித்து கவுரவம் செய்யப்பட்டது. தலைமை ஆசிரியர் முருகேசன் ஏற்புரை வழங்கினார். மேலும் சாய் இன்டர்நேஷனல் ட்ரஸ்ட் நிறுவனர் வெங்கடேஷ் மற்றும் இலசை இப்ராஹிம் மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி கணேசன் பாராட்டி மகிழ்ந்தனர்.மேலும் பார்வையாளர்கள் அனைவருக்கும் செம்பருத்திப்பூ, சங்குப்பூ ஆற்றல் பானம் மற்றும் வாழைப்பழ லட்டுக்கள் வழங்கப்பட்டது. முருகன் மற்றும் ஓய்வு வருவாய் ஆய்வாளர் திரிபுரநாதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)











AnandhApr 19, 2025 - 11:26:11 PM | Posted IP 162.1*****