» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்ப தகராறு: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

திங்கள் 24, மார்ச் 2025 8:41:29 PM (IST)

சாத்தான்குளம்  அருகே கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் இளம் பெண்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்  அருகே உள்ள ஞானியார் குடியிருப்பைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் மனைவி பாலசரஸ்வதி (26). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.  சென்னையில் லாரி  ஓட்டுநராக  இருந்து வந்த அந்தோணிராஜ் கடந்த 22ஆம்தேதி ஊருக்க வந்துள்ளார்.   இன்று பாலசரஸ்வதி, வீட்டில் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. 

இதனால் கணவர் அந்தோணிராஜ், அவரை கண்டித்து பிள்ளைகளுக்கு சாப்பாடு வழங்கிட கூறி அவர் வெளியே உள்ள கட்டிலில் உறங்கியதாக  கூறப்படுகிறது. அப்போது அவர் சுவாதி, வீட்டு கதவு உள்பக்கமாக  பூட்டி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்த தகவலின் பேரில் சாத்தான்குளம்  காவல் ஆய்வாளர்  நாககுமாரி,  இறந்தவர் உடலை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தார். 

இதுகுறித்து பாலசரஸ்வதி தாயார் சுப்புராஜகனி (56) சாத்தான்குளம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory