» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கோவில்பட்டியில் வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிடத்தினை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்தி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தகக்கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழச்சிக்கு கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க தலைவர் சங்கர் கணேஷ் தலைமை வகித்தார்.
கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க செயலாளர் ஜெயசீலன், துணைத்தலைவர் சிவன்பாண்டி, பொருளாளர் ரேவதி, துணைச் செயலாளர் முனீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கட்டிடத்தினை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்தி திறந்து வைத்து, புத்தகக் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கருப்பசாமி, விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன், குற்றவியல் நடுவர் எண் : 1 - நீதிமன்ற நீதிபதி கடற்கரை செல்வம், குற்றவியல நடுவர் எண் : 2- நீதிமன்ற நீதிபதி பீட்டர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அரசு வழக்கறிஞர் சம்பத்குமார், மூத்த வழக்கறிஞர்கள், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியத் துறைமுக வரலாற்றில் மைல்கல்: வ.உ.சி. துறைமுக ஆணையம் சார்பில் ஏஐ அமர்வு!
புதன் 18, பிப்ரவரி 2026 5:22:09 PM (IST)

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!
புதன் 18, பிப்ரவரி 2026 4:24:22 PM (IST)

புதிய வருவாய் அலுவலகத்தை திறக்க நடவடிக்கை : தமாகா இளைஞர் அணி கோரிக்கை!
புதன் 18, பிப்ரவரி 2026 4:23:08 PM (IST)

தூத்துக்குடி - சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரயில்: தெற்கு ரயில்வே பரிந்துரை!
புதன் 18, பிப்ரவரி 2026 4:06:18 PM (IST)

சாத்தான்குளம் வட்டத்தில் ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு!
புதன் 18, பிப்ரவரி 2026 3:51:44 PM (IST)

நடுரோட்டில் கொதிக்கும் எண்ணெய்.. ஆக்கிரமிப்பு பிடியில் விளாத்திகுளம் சாலைகள்: கிராம மக்கள் அவதி!
புதன் 18, பிப்ரவரி 2026 3:22:22 PM (IST)











GM SANKAR GANESHMar 21, 2025 - 03:02:14 PM | Posted IP 162.1*****