» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பேடிஎம் வாலட்டிலிருந்து தவறாக வசூல் செய்த தொலைக்காட்சி நிறுவனம் இழப்பீடு வழங்கஉத்தரவு
திங்கள் 22, ஜூலை 2024 9:58:00 AM (IST)
பேடிஎம் வாலட்டிலிருந்து தவறாக வசூல் செய்த பிரபல தொலைக்காட்சி நிறுவனம் 20,999 ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
தூத்துக்குடி சின்னமணி நகரைச் சார்ந்த பிரவீன் என்பவர் மும்பையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்திடம் ரூ.999 செலுத்தி தொலைக்காட்சி பார்ப்பதற்கான கூப்பன் வாங்கியுள்ளார். ஆனால் அதே கூப்பனுக்காக புகார்தாரரின் பேடிஎம் வாலட்டை பயன்படுத்தி மீண்டும் ரூ.999-ஐ தொலைக்காட்சி நிறுவனம் எடுத்துள்ளனர். இது குறித்து தொலைக்காட்சி நிறுவனத்திடம் முறையிட்டதற்கு சரியான பதில் அளிக்காமல் விட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான பிரவீன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் பேடிஎம் வாலட்டிலிருந்து தவறாக வசூல் செய்த ரூ.999, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு ரூ.10,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.20,999-ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










