» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனல் மின் நிலைய பொறியாளா் வீட்டில் 50 பவுன் நகை திருட்டு

திங்கள் 22, ஜூலை 2024 7:56:07 AM (IST)

தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற அனல்மின் நிலையப் பொறியாளர் வீட்டில் 50 பவுன் நகை, 45ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த முத்துவீரன் மகன் காந்தி (63). தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று உள்ளார். நேற்று வீடு திரும்பியபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

மேலும் வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த  50 பவுன் நகைகள், ரூ. 45 ஆயிரம் ரொக்கம் திருடுபோயிருந்தது. இதுகுறித்து புகாரின்பேரில், வடபாகம் போலீசார் வழக்குப் பதிந்து, அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு ஏ.எஸ்.பி., கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

New Shape Tailors


Arputham Hospital







Thoothukudi Business Directory