» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மழை நீர் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
ஞாயிறு 21, ஜூலை 2024 8:01:13 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சங்கரப்பேரி விளக்கில் இருந்து பெரிய பள்ளம் ஓடையில் இணைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் புறவழிச் சாலையில் இருந்து இந்த ஓடை வழியாக மழை நீரானது தருவைக்குளம் சாலை வழியாக கடலுக்குள் செல்கிறது.
அதனைத் தொடர்ந்து மடத்தூர் பகுதியில் அமைந்துள்ள குளத்தையும் புறவழிச் சாலையில் உள்ள உப்பாற்று ஓடையையும் பார்வையிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். மேலும், தூத்துக்குடி மாநகரத்துக்குள் மழை நீர் வராமல் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஓடைகளை செம்மைப்படுத்தி அகலப்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை மேயர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் குமார், இசக்கிராஜா, திமுக நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)











ஏரியா காரன்Jul 21, 2024 - 09:36:56 PM | Posted IP 162.1*****