» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

ஞாயிறு 21, ஜூலை 2024 12:49:51 PM (IST)



மின்கட்டண உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சிதம்பரம் நகர் பஸ் ஸ்டாப் முன்பு நடந்தது. தூத்துக்குடி தொகுதி பொறுப்பாளர் பாக்யராஜ் தலைமை தாங்கினார். 

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், தொகுதி செயலாளர், மாரி சிவா, தொகுதி பொறுப்பாளர்கள் திருச்செந்தூர், ஞானசேகரன், திருவைகுண்டம், ஜேசுராஜ், ஓட்டப்பிடாரம் வைகுண்ட மாரி, கோவில்பட்டி தங்கம், மாரியப்பன், விளாத்திகுளம், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors


Arputham Hospital





Thoothukudi Business Directory