» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை கண்டித்து தொழிலாளர்கள் ஆா்ப்பாட்டம்!
செவ்வாய் 18, ஜூன் 2024 12:19:43 PM (IST)
தூத்துக்குடியில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை கண்டித்து பணிமனை முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை கண்டித்தும் பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தியும் SETC பணிமனை முன்பு பணிமனை செயலாளா் மாயக்குமாா் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளா் பேச்சிமுத்து வாழ்த்துரை வழங்கினாா், மாவட்ட துணைச் செயலாளா் பிச்சைமணி நன்றியுரையாற்றினாா். இதில், திரளான தொழிலாளா்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.